உடுமலை அருகே குழிப்பட்டியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக் கட்டைகளை கடத்த முயன்ற நான்கு பேர் கைது

குழிப்பட்டியைச் சேர்ந்த பச்சையன், எரிசனம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், குணசேகரன், நடராஜ் ஆகியோர் சந்தன மரத்தை வெட்டி கடத்தியதை ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தனமரத்தை வெட்டி கேரளாவுக்கு கடத்த முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனபகுதியில் அரிய வகை தாவரங்கள் உயிரினங்கள் வனவிலங்குகள், சந்தன மரங்கள் மற்றும் மூலிகை மரங்கள் உள்ளன. இந்த நிலையில் குழிப்பட்டி பகுதியில் உடுமலை வனத்துறையினர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் சந்தன மரத்தை வெட்டி கடத்தியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து உடுமலை வனத்துறைக்கு அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழிப்பட்டியைச் சேர்ந்த பச்சையன், எரிசனம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், குணசேகரன், நடராஜ், ஆகியோர் சந்தன மரத்தை வெட்டியதாக ஒப்புக்கொண்டனர்.



இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தனமரத்தை வெட்டி கேரளாவுக்கு கடத்த முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள எட்டு கிலோ உயர் ரக சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், உடுமலை ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைத்தனர். உடுமலையில் சந்தன மரங்களை வெட்டி கேரளா கடத்த ஒன்று நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...