தாராபுரத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாளைமுன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர், திருப்பூர் புறநகர் மாவட்ட நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107.வது பிறந்தநாள் விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணாசிலை அருகில் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட கழக பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி முன்னிலையில் வடக்கு தெரு காமராஜபுரத்திலிருந்து தாரை தப்பட்டை இசை முழக்கத்துடன் உற்சாகமாக பேரணியாக சின்னக் கடைவீதி கடைவீதி பூக்கடை மொக்கை சந்திப்பு வழியாக பழைய நகராட்சி வளாகம் முன்பு எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் அங்கு அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.



இதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பங்க்கு மகேஷ் தலைமையில் தேவேந்திர தெருவில் எம்.ஜி.ஆரின் 10 ஆடி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



இதன் தொடர்ச்சியாக 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இதில் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை அணியினர், மகளிர் அணியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...