திருப்பூரில் மக்கள் நல மன்றத்தின் சார்பில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனியம்மாள், தொழில் அதிபர் மகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூரில் மக்கள் நல மன்றத்தின் சார்பில் 20வது ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் பினலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாகும். இங்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தைத்திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று பின்னலாடை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள மக்கள் நல மன்றத்தின் சார்பில் இருபதாம் ஆண்டு மூன்று நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.



இரண்டாம் நாளான திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனியம்மாள், தொழில் அதிபர் மகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி பொங்கல் விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் திருப்பூரில் வசிக்கும் இப்பகுதி மக்களுக்கு மக்கள் நல மன்றத்தின் சார்பில் நடைபெற்று வரும் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் அப்பகுதியில் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...