கிழவன் காட்டூர் கிராமத்தில் பாமக சார்பில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாட்டுப்பொங்கல் விழா, பாரம்பரியமான முறையில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் அறிவுரைபடி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதாக மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி கிழவன் காட்டூர் கிராமத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாட்டுப்பொங்கல் பாரம்பரியமான முறையில் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி அறிவுரை படி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து, திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி கூறுகையில், வருடம் முழுவதும் விவசாயத்துக்கு பெரிதும் உதவியாக உள்ள கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாடுகளை அலங்கரித்தும் 18 வகை உணவுகள் படைத்து பாரம்பரியமான முறையில் மாட்டு பொங்கலை கொண்டாடி வருகிறோம்.



மேலும் விவசாயிகளுக்கு உற்ற துணையாக உள்ள ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் தான். விவசாயிகளுக்கான தனி நிதிநிலை போடப்பட்டு விவசாயிகளின் நலனில் அக்கறையுள்ள தலைவராக உள்ளார் என தெரிவித்தார்.

இந்தவிழாவில், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மேற்கு மாவட்ட கொள்கை விளக்க அணி தலைவர் ராமலிங்கம், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபாலு, ஊடக பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், பாமக நிர்வாகிகள் தண்டபாணி, குமார், ஹரிஹரன், கார்த்திக் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...