தாராபுரத்தில் பூர்வகுடி வள்ளுவர் சமுதாயத்தின் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தாராபுரத்தில் பூர்வகுடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்தவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: அய்யன் திருவள்ளுவரின் 2055 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் வாழும் வள்ளுவர் குல இளைஞர் நலச் சங்கத்தின் சார்பில், சமுதாய பொங்கல் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பூர்வ குடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இச்சமுதாயத்தின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் 2024 ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, தாராபுரத்தில் பூர்வ குடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.



விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது. இவ்விழாவினை வாழும் வள்ளுவர் குலஇளைஞர் நலச்சங்கத்தின் தலைவர் ஓம்.பிரகாஷ், துணைத் தலைவர் கார்வேந்தன், செயலாளர் பிரபாகரன், துணைச் செயலாளர் மோகன், பொருளாளர் பிரகாஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...