வால்பாறை அரசு பேருந்து விபத்து: 30 பேர் காயம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


Coimbatore: 

வால்பாறை அரசு பேருந்து விபத்து: 30 பேர் காயம்

கோவை, ஜனவரி 17, 2024: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.





வால்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து வெல்லமலை எஸ்டேட் பகுதிக்கு செல்வகுமார் என்பவர் இயக்கி வந்த பேருந்து, வெல்லமலை எஸ்டேட்டில் இருந்து வால்பாறை நோக்கி ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கி வந்த பேருந்து ஆகிய இரண்டு பேருந்துகளும் மாலை 5.50 மணியளவில் பெட்ரோல் பங்க் பகுதியில் நேருக்கு நேர் மோதின.

இதில், வெல்லமலை எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்து மிகவும் பழமையானது மற்றும் பிரேக் பிடிக்காததால், பேருந்தை நிறுத்துவதற்காக அங்குமிங்கும் சாலையில் இடித்துக் கொண்டு வந்தது. அப்போது, சாலையின் ஓரம் நின்ற டாடா சுமோ மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை இடித்து, எதிரே வந்த பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், இரண்டு பேருந்துகளில் பயணித்த 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களை 108 மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், படுகாயமடைந்த மூன்று பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பொங்கல் விடுமுறை என்பதால், சாலைகளில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கூட்டம் அலைமோதியது. இந்த சூழ்நிலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...