வால்பாறை அரசு பேருந்து விபத்து: 30 பேர் காயம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


Coimbatore: 

வால்பாறை அரசு பேருந்து விபத்து: 30 பேர் காயம்

கோவை, ஜனவரி 17, 2024: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.





வால்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து வெல்லமலை எஸ்டேட் பகுதிக்கு செல்வகுமார் என்பவர் இயக்கி வந்த பேருந்து, வெல்லமலை எஸ்டேட்டில் இருந்து வால்பாறை நோக்கி ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கி வந்த பேருந்து ஆகிய இரண்டு பேருந்துகளும் மாலை 5.50 மணியளவில் பெட்ரோல் பங்க் பகுதியில் நேருக்கு நேர் மோதின.

இதில், வெல்லமலை எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்து மிகவும் பழமையானது மற்றும் பிரேக் பிடிக்காததால், பேருந்தை நிறுத்துவதற்காக அங்குமிங்கும் சாலையில் இடித்துக் கொண்டு வந்தது. அப்போது, சாலையின் ஓரம் நின்ற டாடா சுமோ மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை இடித்து, எதிரே வந்த பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், இரண்டு பேருந்துகளில் பயணித்த 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களை 108 மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், படுகாயமடைந்த மூன்று பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பொங்கல் விடுமுறை என்பதால், சாலைகளில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கூட்டம் அலைமோதியது. இந்த சூழ்நிலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...