பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு

மாநிலம் முழுவதும் இருந்து 100 தனி நபர்கள், நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருதுக்கு வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்புக்காக 2021 - 22-ஆம் ஆண்டில் இருந்து பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் இருந்து 100 தனி நபா்கள், நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தனி நபா்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டோர் தகுதியுடையவா்.

இவா்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அது தொடா்பான துறைகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பசுமை சாம்பியன் விருதுக்கு மதிப்பீடு செய்யப்படுவாா்கள். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் சுற்றுச்சூழல் கல்வி, பயிற்சி, விழிப்புணா்வு, பாதுகாப்பு, புதிய பசுமைப் பொருள்கள், அது தொடா்பான ஆய்வுகள், நீடித்த நிலையான வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் நிலை பாதுகாப்பு, நீா் சேமிப்பு, காற்று மாசு, பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்துதல், மறுசுழற்சி உள்ளிட்ட பணிகளில் ஆற்றிய பங்களிப்பு கருத்தில் கொள்ளப்படும். இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படுபவா்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினத்தில் விருது வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் மூன்று பேருக்கு இந்த விருது வழங்கப்படும். விருது தொடா்பான விவரம், விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கோவை தெற்கு என்ற முகவரியை அணுகலாம். விண்ணப்பங்களை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...