கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் முறைகேடு குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம்

கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் மற்றொருவர் முறைகேடு குற்றச்சாட்டில் இந்து அறநிலையத்துறையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள தர்மலிங்கேஷ்வரர் கோவில் அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் திருமூர்த்தி ஆகிய இருவரையும் இந்து அறநிலையத்துறையினர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை முறைகேடுகள் நடைபெற்றதாக சி.கே.கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பின்னணியில் எடுக்கப்பட்டது.

விசாரணையில், உண்டியல் பணம் மற்றும் நன்கொடை வசூலில் முறையான கணக்கு இல்லாமை, அரசிடம் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்டல், கோவிலுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதும், கையாடல் மூலம் இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, மதுக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 28 ஏக்கர் நிலம் ரூ.125 கோடி மதிப்பிலானது கோவில் பெயரில் இல்லாமல் இருந்தது மற்றும் இந்த சொத்துகள் மூலம் வருமானம் ஈட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபத்தை அன்னதான மண்டபம் என கணக்கு காட்டி, அதிலிருந்து வரும் வருவாயை கையாடல் செய்திருப்பதும் கண்டறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் திருமூர்த்தி ஆகிய இருவரையும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில், கோவிலின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள் மேலும் ஆழமாக விசாரிக்கப்பட உள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...