கோவை - ஜபல்பூர் இடையிலான வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு

ஜனவரி 12 முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு ஜபல்பூரில் புறப்படும் ஜபல்பூா்-கோவை சிறப்பு ரயில் (எண்: 02198) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை-ஜபல்பூா் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 12 முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு ஜபல்பூரில் புறப்படும் ஜபல்பூா்-கோவை சிறப்பு ரயில் (எண்: 02198) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ஜனவரி 15 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை திங்கள்கிழமை மாலை 5.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - ஜபல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 02197) புதன்கிழமை காலை 8.45 மணிக்கு ஜபல்பூரைச் சென்றடையும்.

இந்த ரயில் பாலக்காடு, ஷோரணூா், மங்களூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...