சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி வரும் 10ம் தேதி போராட்டம் - திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி நிலைபாடுகள் குறித்து கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சரியான நேரத்தில் அறிவிப்பார் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ஜாபர் அலி தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சிகள் மற்றும் இயக்கங்களில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியில் மாநில செயலாளர் ஜாபர் அலி முன்னிலையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்துக் கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட செயலாளராக ராயல் ராஜா என்பவர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் ஜாபர் அலி,



இன்றைய தினம் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிமுன் அன்சாரியின் அரசியலால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்து இருப்பதாகவும், வருகின்ற 28ஆம் தேதி பழனி பாபா நினைவு நாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் தமிமுன் அன்சாரி முன்னிலையில் தங்களை மனித நேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொள்ள இருப்பதாகவும், அவ்விழா ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கும் விழாவாக அமையும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து வருகின்ற 10ஆம் தேதி திருச்சியில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாகவும், தமிழக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை கிணற்றில் போட்ட கல் போல நிறைவேற்றாமல் இருப்பதாகவும், உடனடியாக பாதிக்கப்பட்டு வருபவர்களின் குரலாய் மனிதநேய ஜனநாயக கட்சி நடத்துகின்ற இந்த போராட்டத்திற்கு செவி சாய்த்து 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக கூறினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...