ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

முறையான மாதாந்திர ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  சத்துணவு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சத்துணவு ஊழியர்களுக்கு முறையான மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை ரூபாய் 3 லட்சம் வழங்கிட மாநில நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறித்தி ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து, தமிழக அரசு தங்களை தொடர்ந்து புறக்கணிக்குமானால் காபந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் சத்துணவு ஊழியர்கள் செயல்படுவார்கள் என எச்சரித்தார். மேலும் 2 நாட்களாக ஏழை குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் போராட்டம் நடத்தி வரும் தங்களின்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்ததால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார். 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...