கோவை–சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே 300 கிலோ ரேசன் அரிசி கடத்தியவர் கைது

பாலக்காடு மாவட்டம் கொடும்பு, சென்னம் கொடுவை சேர்ந்த, சிவதாசன் என்பவர், எஸ்.ஐ. எச்.எஸ்.காலனி, ‘நீலி கோணாம்பாளையம் பகுதி பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரசி வாங்கி கேரளாவில் உள்ள ஓட்டல்கள் மற்றும் மளிகை கடைகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் நேற்று கோவை–சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வாகனத்தை ஓட்டி வந்த அரிசி மற்றும் வாகன உரிமையாளரான பாலக்காடு மாவட்டம் கொடும்பு, சென்னம் கொடுவை சேர்ந்த, சிவதாசன் (வயது 45) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் அந்த ரேஷன் அரிசியை எஸ்.ஐ. எச்.எஸ்.காலனி, ‘நீலி கோணாம் பாளையம் பகுதி பொதுமக்களிடம குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் உள்ள கொடும்பு பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் மளிகை கடைகளுக்கு அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதன் பேரில் அவரை கைது செய்தனர். பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...