பெதம்பம்பட்டியில் ராமர் வேடம் அணிந்து குழந்தைகள் அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் வழங்கினர்

கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தற்பொழுது அனைவருக்கும் குழந்தைகளுக்கு ராமர் வேடம் அணிந்து அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றது என்று இந்து அமைப்பு நிர்வாகி ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பெதம்பம்பட்டியில் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேஷத்ர டிரஸ்ட் வேண்டுகோளுக்கு இணங்க இந்து அமைப்புகள் சார்பில் நால்ரோடு, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் சாலை பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் குழந்தைகள் ராமர் வேடம் அணிந்து அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் மற்றும் அழைப்பிதழ் வழங்கினர்.



அப்போது இந்து அமைப்புகள் சார்பில் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசங்கள் இட்டவாறு சென்றனர். மேலும் இந்து அமைப்பு நிர்வாகி ஜெயபிரகாஷ் கூறும் பொழுது, பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் தற்பொழுது பல வருடங்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.



இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தற்பொழுது அனைவருக்கும் குழந்தைகளுக்கு ராமர் வேடம் அணிந்து அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...