கோவையில் மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஜனவரி 21 ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெறவிற்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டில் கோவை மாநகர் மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர் அணி தம்பிமார்கள் வெண் சீருடையுடன் பங்கேற்பது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: கோவை, வடகோவை, கிராஸ்கட்சாலை, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற, கோவை‌ மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ExMLA., அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.



பின்னர், கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் இரண்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்:1

மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், கழகத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில், ஜனவரி 21 ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெறவிற்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டில் கோவை மாநகர் மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர் அணி தம்பிமார்கள் வெண் சீருடையுடன் பங்கேற்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 2

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான, உழைக்கும் உழவர் பெருமக்கள் இயற்கைக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் ஜாதி, மதபேதங்களை களைந்து, எல்லோரும் ஓர் இனமாய் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளை, கோவை மாநகர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிக் கழகங்கள், வார்டுகளிலும் கழகத்தின் இருவண்ண கொடி ஏற்றிவைத்தும், "சமத்துவப் பொங்கல்" வைத்தும், தமிழர்களின் பாரம்பரியமான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தியும், திருவள்ளுவர் பெருந்தகை அவர்களுக்கு மலர்மாலை அணிவித்தும், மகளிர்கள் பங்கேற்க கூடிய கோலப்போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தி, கோலாகலமாக பொங்கல் விழாவை கொண்டாடுவதென்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இக்கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், தலைமை கழக நிர்வாகிகள், தீர்மானக்குழு இணைச்செயலாளர் பி.நாச்சிமுத்து, கழக சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கே.எம்.தண்டபாணி, பி.ஆர்.அருள்மொழி, தீர்மானக்குழு உறுப்பினர் மு.ரா.செல்வராஜ், மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் தமிழ் செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வே.பாலசுப்ரமணியம், ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.ம.ச.முருகன், புதூர்மணிகண்டன், சசிக்குமார், சா.கர்த்திகேயன், பகுதிச் செயலாளர்கள் ஆர்.எம்.சேதுராமன், கணபதி‌லோகு, அஞ்சுகம் பழனியப்பன், வ.ம.சண்முகசுந்தரம், பரணி கே.பாக்கியராஜ், கே.எம்.ரவி, ப.பசுபதி, மார்க்கெட் எம்.மனோகரன், வி.ஐ.பதுருதீன், சிங்கை மு.சிவா, துரை.செந்தமிழ்செல்வன், மா.நாகராஜ், இரா.சேரலாதன், அணிகளின் அமைப்பாளர்கள் இ.ரா.தனபால், அக்ரிபாலு, பூரணச்சந்திரன், அன்புச்செழியன், சி.ஆர்.கனிமொழி, அன்னம்மாள் Ex.Mc., ஸ்ரீ சத்யா, கோவை தங்கம், சிவப்பிரகாஷ், கண்ணன், டெம்போ சிவா, ஏ.எஸ்.ஜெயகுமார், எஸ்.கண்ணன், வி.எம்.மணி, உமாகாந்தன், கோவை அபு, கே.ஆர்.ராஜா, இலா.தேவசீலன், கராத்தே அர்ச்சுனன், அணிகளின் தலைவர்கள் சிவராமன், சாந்தாமணி பன்னீர்செல்வம், ஜார்ஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...