கள்ளுக்கடைக்கு அரசு அனுமதிக்க வேண்டும் - பொள்ளாச்சியில் ER.ஈஸ்வரன் பேட்டி

பீக் அவர்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் 24 மணிநேரம் இயங்கும் தொழிற்சாலைகள் சோதனையான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. எனவே தமிழக அரசு நிலைக்கட்டணம், பீக் அவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ER ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.


கோவை: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியில் உள்ள தீரன் சின்னமலை அரங்கில் மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ER ஈஸ்வரன் கலந்து கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை முழுமையாக மூட வேண்டும், கள் மதுபான பொருள் அல்ல, மற்ற மாநிலங்களை போல விவசாயிகள் நலன் கருதி கள் இறக்க அனுமதி வழங்கி மதுக்கடைகளை தமிழக அரசு மூட வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர், கொள்முதல் விலையை ஏற்றுவது போல் ஏற்றுகிறார்கள், ஆனால் தேவை அதிகரிக்கிறது, மற்ற மாநிலங்களில் இருந்து தமிழத்தில் பால் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர், ஆவின் ஏன் வாங்க முடியாது பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி வழங்க வேண்டும், தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் நிலை கட்டணம் உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், பீக் அவர்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் 24 மணிநேரம் இயங்கும் தொழிற்சாலைகள் சோதனையான காலகட்டத்தை சந்தித்து வருகிறது, எனவே தமிழக அரசு நிலைக்கட்டணம், பீக் அவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...