கள்ளுக்கடைக்கு அரசு அனுமதிக்க வேண்டும் - பொள்ளாச்சியில் ER.ஈஸ்வரன் பேட்டி

பீக் அவர்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் 24 மணிநேரம் இயங்கும் தொழிற்சாலைகள் சோதனையான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. எனவே தமிழக அரசு நிலைக்கட்டணம், பீக் அவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ER ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.


கோவை: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியில் உள்ள தீரன் சின்னமலை அரங்கில் மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ER ஈஸ்வரன் கலந்து கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை முழுமையாக மூட வேண்டும், கள் மதுபான பொருள் அல்ல, மற்ற மாநிலங்களை போல விவசாயிகள் நலன் கருதி கள் இறக்க அனுமதி வழங்கி மதுக்கடைகளை தமிழக அரசு மூட வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர், கொள்முதல் விலையை ஏற்றுவது போல் ஏற்றுகிறார்கள், ஆனால் தேவை அதிகரிக்கிறது, மற்ற மாநிலங்களில் இருந்து தமிழத்தில் பால் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர், ஆவின் ஏன் வாங்க முடியாது பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி வழங்க வேண்டும், தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் நிலை கட்டணம் உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், பீக் அவர்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் 24 மணிநேரம் இயங்கும் தொழிற்சாலைகள் சோதனையான காலகட்டத்தை சந்தித்து வருகிறது, எனவே தமிழக அரசு நிலைக்கட்டணம், பீக் அவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...