கள்ளுக்கடைக்கு அரசு அனுமதிக்க வேண்டும் - பொள்ளாச்சியில் ER.ஈஸ்வரன் பேட்டி

பீக் அவர்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் 24 மணிநேரம் இயங்கும் தொழிற்சாலைகள் சோதனையான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. எனவே தமிழக அரசு நிலைக்கட்டணம், பீக் அவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ER ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.


கோவை: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியில் உள்ள தீரன் சின்னமலை அரங்கில் மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ER ஈஸ்வரன் கலந்து கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை முழுமையாக மூட வேண்டும், கள் மதுபான பொருள் அல்ல, மற்ற மாநிலங்களை போல விவசாயிகள் நலன் கருதி கள் இறக்க அனுமதி வழங்கி மதுக்கடைகளை தமிழக அரசு மூட வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர், கொள்முதல் விலையை ஏற்றுவது போல் ஏற்றுகிறார்கள், ஆனால் தேவை அதிகரிக்கிறது, மற்ற மாநிலங்களில் இருந்து தமிழத்தில் பால் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர், ஆவின் ஏன் வாங்க முடியாது பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி வழங்க வேண்டும், தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் நிலை கட்டணம் உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், பீக் அவர்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் 24 மணிநேரம் இயங்கும் தொழிற்சாலைகள் சோதனையான காலகட்டத்தை சந்தித்து வருகிறது, எனவே தமிழக அரசு நிலைக்கட்டணம், பீக் அவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...