சபரிமலை போகவே பயமா இருக்கு - சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து கவலை

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள், கூடுதலான கூட்டம் மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் பயணம் செல்வதில் அச்சம் அடைந்துள்ளனர்.


கோவை: கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது வழக்கமாகும். இந்த ஆண்டு சபரிமலையில் அதிகளவில் கூட்டம் மற்றும் நெரிசல் இருப்பதால் தமிழ்நாட்டிலிருந்து பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் சபரிமலை செல்வதற்கு முன்னோட்டமாக இருமுடி கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 55 ஆண்டுகளாக ஐயப்பன் கோவில் சென்று வந்த பக்தர்கள், இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்லாமல் குளத்துப்புழை கோவிலுக்கு செல்வதாக முடிவு செய்துள்ளனர்.



சபரிமலையில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் மேற்கொள்ளவும், பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததாலும், உணவு மற்றும் நீர் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்படுவதாலும் பயணம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதால், அனைத்து மாநில அரசுகளும் ஒன்றுசேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு பக்தர்களுக்கு உரிய வழிகாட்டுதலுடன் அனுப்ப வேண்டும் என்றும் ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...