சபரிமலை போகவே பயமா இருக்கு - சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து கவலை

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள், கூடுதலான கூட்டம் மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் பயணம் செல்வதில் அச்சம் அடைந்துள்ளனர்.


கோவை: கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது வழக்கமாகும். இந்த ஆண்டு சபரிமலையில் அதிகளவில் கூட்டம் மற்றும் நெரிசல் இருப்பதால் தமிழ்நாட்டிலிருந்து பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் சபரிமலை செல்வதற்கு முன்னோட்டமாக இருமுடி கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 55 ஆண்டுகளாக ஐயப்பன் கோவில் சென்று வந்த பக்தர்கள், இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்லாமல் குளத்துப்புழை கோவிலுக்கு செல்வதாக முடிவு செய்துள்ளனர்.



சபரிமலையில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் மேற்கொள்ளவும், பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததாலும், உணவு மற்றும் நீர் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்படுவதாலும் பயணம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதால், அனைத்து மாநில அரசுகளும் ஒன்றுசேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு பக்தர்களுக்கு உரிய வழிகாட்டுதலுடன் அனுப்ப வேண்டும் என்றும் ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...