பல்லடம் அருகே கேத்தனூரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்

பல்லடம் அருகே கேத்தனூரில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையம் பிரிவில் எல்.எம் பள்ளி நடத்திய இயற்கையை பாதுகாப்போம் என்ற கருத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.



கேத்தனூரில் தொடங்கி குள்ளம்பாளையம் வரை 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



பள்ளியின் தாளாளர் பாப்பாள், முதல்வர் சபீனா பர்வீன், பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு மற்றும் காமநாயக்கன்பாளையம் ஆய்வாளர் ரவி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.

போட்டிக்குப் பிறகு, காமநாயக்கன்பாளையம் ஆய்வாளர் செல்போன் மோகம் குறைக்குமாறும், அனைத்து வீடுகளிலும் சிசிடிவி பொருத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...