காங்கேயம் சந்தை முன்பக்க கேட் பூட்டப்பட்டதால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

சந்தையின் கேட்டை திறக்கவில்லை என்றால் நகராட்சி முன்பும், காவல் நிலையம் முன்பும் காய்கறிகளை போட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சந்தை வளாகத்தில் உட்புறமாக உழவர் சந்தை செயல்படுகின்றது. சந்தை பேட்டை குடிகாரர்களின் கூடாரமாக மாறிவருவதற்கு தடை போடவேண்டும் என நினைத்த நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் சந்தை கேட்டை பூட்டி வைத்துள்ளனர்.

இதனால் தினசரி அதிகாலை முதலே விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்யும் உழவர் சந்தைக்கு பொதுமக்கள் வருவது இல்லை. இதனால் பல லட்சம் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் வீணாகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த செயல் எலிக்கு பயந்து வீட்டை தீ வைத்து கொளுத்தியது போல் உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர். காங்கேயத்தில் தினசரி வியாபாரிகளால் தினசரி மார்க்கெட் நடைபெற்று வருகிறது.



மேலும் சந்தை வளாகத்தின் உட்பகுதியிலேயே உழவர் சந்தை நடைபெற்று வருகின்றது. இதில் காங்கேயம் பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் காய்கறிகளை அங்கு வந்துவிற்பனை செய்கின்றனர். தூய்மையாகவும், அன்று அன்றைக்கு தேவை படும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் உட்பட ஏராளமான பொருட்களை 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கே கொண்டு வந்து கடைகளுக்கு மொத்தமாகவும் பொதுமக்களுக்கு நியாவிலையிலும் விற்பனை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் இதே பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் செயல்பட்டு வருகின்றது. இந்த டாஸ்மாக் கடையில் வாங்கும் மதுக்களை மதுபிரியர்கள் சந்தை வளாகத்தில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் சந்தை பகுதியிலேயே கிளை நூலகம் செயல்படுகின்றது. இங்கு வரும் மாணவ, மாணவிகள், பெண்களிடம் மதுபிரியர்கள் தகாத வார்த்தைகள் பேசுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் சந்தையின் முன் பகுதி கேட்டை பூட்டிவிட்டனர். உழவர் சந்தைக்கு மார்க்கெட் வழியாக சென்று மற்றொரு வழியில் வரும்படி கூறிவிட்டனர். இந்த தடம் விவசாயிகளுக்கு தெரியும். ஆனால் பொதுமக்களுக்கு பரிச்சயம் இல்லை. இதனால், பல லட்சம் ரூபாய் காய்கறிகள் கடந்த 4 நாட்களில் வீணாவதாக தெரிவித்தனர். மேலும் உழவர் சந்தை பயன்படுத்தும் விவசாயிகள் சந்தையின் கேட்டை திறக்கவில்லை என்றால் நகராட்சி முன்பும் காவல் நிலையம் முன்பும் காய்கறிகளை போட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மதியம் 12 மணிக்கு திறக்கவேண்டிய டாஸ்மாக் கடை முறைகேடாக அதிகாலை முதலே விற்பனை செய்வதும், அங்கு மதுக்களை வாங்கிய மதுபிரியர்கள் சந்தை வளாகத்தில் குடித்து ரகளையில் ஈடுபடுவதை தடுக்க முடியாத நகராட்சி நிர்வாகமும் மற்றும் காவல்துறையும் சந்தையின் முன் பக்க கேட்டை பூட்டி வைத்துள்ளது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். எலிக்கு பயந்து கொண்டு வீட்டிற்கு தீ வைத்தது போல் உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...