இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண்பது, உயர்கல்வி வழிகாட்டுதல், இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத பெற்றோர்கள் வழிகாட்டுதல், போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தடுத்தல் ஆகியவை குறித்து பள்ளி மேலாண்மை கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி வருடத்தின் முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது.



அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார்‌. பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பிரியங்கா முன்னிலை வைத்தார்.

கூட்டத்தில் வருகின்ற ஜனவரி 8 முதல் 10ஆம் தேதி வரை பள்ளி வளாகத்தை தூய்மை செய்து பள்ளி வளாகம் மிளிரும் பள்ளியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது சார்பாக கலந்துரையாடப்பட்டது.



பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண்பது, உயர்கல்வி வழிகாட்டுதல், இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத பெற்றோர்கள் வழிகாட்டுதல், போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தடுத்தல், அது சார்ந்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அதேபோல பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வருகை தரும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வேறொரு நாளில் பணி வழங்குதல் குறித்த அரசாணைகள் ஆகியவற்றை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துரைத்தார். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டம் குறித்த காணொளிகள் திரையிடப்பட்டன. நிறைவாக இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர் கோகுல பிரியா நன்றி கூறினார்.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...