இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண்பது, உயர்கல்வி வழிகாட்டுதல், இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத பெற்றோர்கள் வழிகாட்டுதல், போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தடுத்தல் ஆகியவை குறித்து பள்ளி மேலாண்மை கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி வருடத்தின் முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது.



அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார்‌. பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பிரியங்கா முன்னிலை வைத்தார்.

கூட்டத்தில் வருகின்ற ஜனவரி 8 முதல் 10ஆம் தேதி வரை பள்ளி வளாகத்தை தூய்மை செய்து பள்ளி வளாகம் மிளிரும் பள்ளியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது சார்பாக கலந்துரையாடப்பட்டது.



பள்ளி செல்லா குழந்தைகளை அடையாளம் காண்பது, உயர்கல்வி வழிகாட்டுதல், இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத பெற்றோர்கள் வழிகாட்டுதல், போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தடுத்தல், அது சார்ந்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அதேபோல பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வருகை தரும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வேறொரு நாளில் பணி வழங்குதல் குறித்த அரசாணைகள் ஆகியவற்றை பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துரைத்தார். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டம் குறித்த காணொளிகள் திரையிடப்பட்டன. நிறைவாக இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர் கோகுல பிரியா நன்றி கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...