உடுமலை பகுதியில் பொங்கலை முன்னிட்டு மண் பானை உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரம்

மண்பானையில் பொங்கல் இடும் கலாச்சாரம் மறைந்து குக்கரில் பொங்கல் வைக்கும் நிகழ்வு வந்து விட்டது. எங்களது தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வீட்டுக்கு ஒரு மண்பானை வாங்கி பொங்கல் வைப்பதற்கும் அரசு விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று மண் பானை தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம், பூளவாடி, பூக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தமிழா்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டை வெளிப்படுத்தும் பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

அப்போது உழவுத் தொழிலுக்கு ஆதாரமாக உள்ள கால்நடைகள் மற்றும் சூரியபகவானுக்கு பச்சரிசி, வெல்லம், நெய் சேர்த்து புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது தமிழா்களின் மரபாகும்.



பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் மண் பானைகள் உற்பத்தி பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மந்தமான வானிலை நிலவுவதால் பானைகளை காயவைத்து பக்குவப்படுத்தி வடிவமைப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து பள்ளபாளையத்தைச் சேர்ந்த மண்பாண்ட உற்பத்தியாளர் குப்புசாமி கூறுகையில்,பல்வேறு விதமான வடிவங்களில் பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றோம். முன்னோர்கள் காலத்தில் இருந்தே புதிய பானையில் புதிய அரிசியை இட்டு பொங்கலிடுவது வழக்கம். இதனால் தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம்.

ஆனால் மண்பானையில் பொங்கல் இடும் கலாச்சாரம் மறைந்து குக்கரில் பொங்கல் வைக்கும் நிகழ்வு வந்து விட்டது. எங்களது தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வீட்டுக்கு ஒரு மண்பானை வாங்கி பொங்கல் வைப்பதற்கும் அரசு விழிப்புணர்வு செய்ய வேண்டும், நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுடன் பொங்கல் பாணை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மண் பானையில் தயாராகும் பொங்கல் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். தற்போது அரை கிலோ கொள்ளளவு கொண்ட மண்பானை ரூ 100 க்கும் ஒரு கிலோ கொள்ள கொண்ட பானை ரூ.150 க்கும் விற்பனை செய்கின்றோம். இவ்வாறு தெரிவித்தார்

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...