முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் குளறுபடி - பொள்ளாச்சி ஒன்றிய கூட்டத்தில் புகார்

கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை செப்பணிட வேண்டும் என்று பெரும்பாலான ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் விஜயராணி தலைமையில் நடைபெற்றது.



இதில் கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை செப்பணிட வேண்டும் என்று பெரும்பாலான ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது ஆச்சிபட்டி ஒன்றிய குழு உறுப்பினர் மாலினி பேசிய போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் கலந்து கொண்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது. ஆச்சிபட்டி ஊராட்சியில் வசிக்கும் 11 பயனாளிகளை தேர்வு செய்து மாவட்ட நிர்வாகம் பெயர் பட்டியல் அனுப்பியது.

ஆனால் அந்த பட்டியலில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை என புகார் தெரிவித்தார். இது குறித்து மாலினி கூறும் போது தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்து அனுப்பப்பட்ட பட்டியலில் தங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் பெயர் பட்டியல் இடம் பெற்றிருந்தது.



மாவட்ட நிர்வாகம் அனுப்பிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது நலத்திட்ட உதவிகளை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என தெரிவித்தார்கள். இது வேதனையாக உள்ளது. முதல்வர் வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான பயனாளிகளை அதிகாரிகள் முறையாக தேர்வு செய்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...