3,500 ரூபாய் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

சத்துணவு ஊழியர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சத்துணவு ஊழியர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்குதிடுதல் மற்றும் ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு 3 இலட்ச ரூபாய் பணிக்கொடை வழங்குதல் ஆகிய கோரிக்களை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் அவ்வமைப்பினர் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் மாநில தலைவர் பழனிச்சாமி, சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், சத்துணவு ஊழியர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், இல்லையெனில் வருகின்ற ஏப்ரல் 25-ம் தேதி முதல் தமிழகத்தில் 43 ஆயிரம் சத்துணவு மையங்களையும் இழுத்து மூடி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.



இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...