பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முற்றுகை - நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்பு

பேருந்து நிறுத்தத்தில் நிழல் குடை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதனைக்கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள திருவள்ளுவர் திடலில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேருந்து நிறுத்தத்தில் நிழல் குடை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வகையில் பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து எந்த ஒரு அரசு அதிகாரிகளும் வரவில்லை எனக்கூறி இதனை கண்டிக்கும் வகையில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் நுழைவாயில் முன்பாக முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் திரண்டு திடீரென நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து நகராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பொள்ளாச்சி நகராட்சியில் அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை, குப்பை சரிவர அள்ளுவதில்லை, தெரு விளக்குகள் எரிவதில்லை, நகராட்சி அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் பெறுகின்றனர் என சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டினார்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...