புத்தாண்டு விடுமுறையில் கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

புத்தாண்டு அன்று ஒரேநாளில் மட்டும் 327 குழந்தைகள் உட்பட 2,400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக அருவியில் குளித்து மகிழ்ந்தோடு, செல்போன்களில் படங்களையும் எடுத்துச் சென்றனர்.


கோவை: புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலத்திற்கு வந்த 2,400 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.



கோவை சிறுவாணி சாலை சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.



இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், காலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று குற்றால அருவிக்கு செல்வதற்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு, பின்னர் சுற்றுலா வாகனத்தில் ஏறி குற்றாலம் அருவிக்கு சென்றனர்.



அப்பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசித்த சுற்றுலாப் பயணிகள், பின்னர் குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



புத்தாண்டு விடுமுறை என்பதால் ஒரே நாளில் 327 குழந்தைகள் உட்பட 2,400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக அருவியில் குளித்து மகிழ்ந்தோடு, செல்போன்களில் படங்களையும் எடுத்துச் சென்றனர். அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்து இருந்ததால் வனத்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...