திருநங்கையா் முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

விண்ணப்பதாரா்கள் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: திருநங்கையா் முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருநங்கையா்கள் சொந்த முயற்சியில் படித்து தனித்திறமையைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியவா்களில் ஒருவருக்கு முன்மாதிரி விருது திருநங்கையா் தினமான 2024 ஏப்ரல் 15 -ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

இவ்விருது வழங்குவதற்குத் தகுதியான திருநங்கையா்களிடம் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது ரூ.1 லட்சம் காசோலை, சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். விண்ணப்பதாரா்கள் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

விண்ணப்பதாரா்கள் உரிய கருத்துருக்களுடன் இணையதளம் மூலமாகப் பதிவு செய்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துருக்களை ஜனவரி 31 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளம் மூலமாகவும், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலும் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...