அமராவதி முதலைப் பண்ணை அருகே வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கடை திறப்பு

முதற்கட்டமாக குடிநீர், ஐஸ்கிரீம், தேநீர், மீன் வருவல், ஆனைமலை புலிகள் காப்பக சின்னத்தில் கீ செயின், டீ சர்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அவர்களது கருத்துக்கேற்ப உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே அமராவதி அணையின் முதலைப் பண்ணை பகுதியில் சுற்றுச்சூழல் கடை திறக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் கோட்டம், அமராவதி வனச்சரகம் சார்பில் அமராவதி அணை பகுதி அருகே கடந்த 1975 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதலைப்பண்ணை துவக்கப்பட்டது.



இங்கு குட்டிகள் முதல் பெரியது வரை 84 சதுப்பு நில முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அமராவதி வனச்சரகத்தில் கரட்டுப்பதி, பாறையூர், தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக தமிழக அரசு வனத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அமராவதி முதலை பண்ணை அருகே கரட்டுப்பதியில் 75 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக சுற்றுச்சூழல் மேம்பாட்டுகுழு அமைக்கப்பட்டு, வனத்துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல் கடை திறக்கப்பட்டது.

இங்கு முதற்கட்டமாக குடிநீர், ஐஸ்கிரீம், தேநீர், மீன் வருவல், ஆனைமலை புலிகள் காப்பக சின்னத்தில் கீ செயின், டீ சர்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அவர்களது கருத்துக்கேற்ப உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



சூழல் கடை திறப்பில் ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் ராமசுப்பிரமணியம், இணை இயக்குனர் தேவேந்திர குமார் ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர். இதில் அமராவதி வனச்சரகர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம் முதலைப் பண்ணையில் பராமரித்து வரும் முதலைகள் மற்றும் அவற்றிற்கு வழங்கப்படும் உணவு குறித்தும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் குறித்தும் வனத்துறையினரிடம் ஆலோசனை செய்தார்.

மேலும் புதிதாக துவங்கப்பட்டுள்ள சூழல் கடையில் உணவுகளை தரமாகவும், சுகாதாரமாகவும் சுற்றுலா பயணிகள், மாணவர்களின் கருத்துக்களை கேட்டு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்க அறிவுறுத்தினார். தேர்வு விடுமுறை என்பதால் முதலை பண்ணைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...