தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்து பயிலும் மாற்று திறனாளி மாணவர்களில் தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக நான்கு வருட கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்திற்கான காசோலையை சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் முனைவர்.PC.துரைசாமி மற்றும் முனைவர் சாந்தி துரைசாமி அவர்கள் வழங்கினர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாற்று திறனாளிமாணவர்களுக்கு சக்தி மசாலா நிறுவனம் தனது சக்திதேவி அறக்கட்டளையின் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் 27.12.2023 அன்று நடைபெற்றது.

முனைவர் N.வெங்கடேசபழனிச்சாமி, முதன்மையர் (வேளாண்மை) அவர்கள் தனது வரவேற்பு உரையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கிவரும் ஒருங்கிணைப்பு கல்வி உதவித்தொகைமையமானது பொருளாதாரரீதியில் பின்தங்கிய மற்றும் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களின் மூலம் கல்வி உதவித்தொகை ஏற்பாடு செய்து வருவதாக கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் V. கீதாலட்சுமி அவர்கள் விழாவினை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் சக்தி மசாலா நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தோடு இணைந்து மாணவர்களுக்கான பல நலத்திட்ட முயற்சிகளை எடுத்துள்ளது.

இந்த திட்டங்களின் மூலம் மாற்றுதிறனாளி மாணவர்கள் மற்றும் மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் எழுத முனைப்புள்ள மாணவர்கள் ஆகியோர் மிகவும் பயனடைவார்கள் என்று கூறினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் R. தமிழ்வேந்தன் அவர்கள் முன்னோடி தொழிற்நிறுவனமாகிய சக்தி மசாலா தனது அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்வது மிகவும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமாகும் எனவும், இந்நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பயனடைகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்து பயிலும் மாற்று திறனாளி மாணவர்களில் தகுதி மதிப்பெண் அடிப்படையில் (cutoff mark) தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக நான்கு வருட கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்திற்கான காசோலையை சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் முனைவர்.PC.துரைசாமி மற்றும் முனைவர் சாந்தி துரைசாமி அவர்கள் வழங்கினர்.

மேலும், சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் தனது சிறப்புரையில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் இவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி சிறந்த வேளாண் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் மற்றும் விவசாயத்தின் தரத்தை உலக நாடுகளுக்கு சமமாக எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



சக்தி தேவி அறக்கட்டளையின் இயக்குனர் முனைவர். சாந்திதுரைசாமி அவர்கள் தனது சிறப்புரையில் பெண்கள் முதலில் தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும். ஆறாம் வகுப்பே படித்திருந்த நான் பின்னர் என் கணவரது உறுதுணையாலும், ஊக்குவிப்பாலும் அவர் படித்த கல்லூரியிலேயே படித்து பல பட்டங்கள் பெற்றுள்ளேன். கடந்த 23 ஆண்டுகளாக பல சமூக உதவிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு செய்து வருகிறேன் என்றால் "அது நம்மால் முடியும்"என்ற தன்னம்பிக்கையினால்தான் என்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.



நிகழ்ச்சியின் இறுதியில் பல்கலைக்கழகத்தின் கல்வி உதவித்தொகை ஒருங்கிணைப்பு அதிகாரி முனைவர். P.G.கவிதா தனது நன்றியுரையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருங்கிணைப்பு கல்வி உதவித்தொகைமையத்தின் மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளை சேர்ந்த 82 மாணவர்கள் அரசாங்க கல்வி உதவித்தொகை நீங்கலாக, பல்வேறு தொண்டு நிறுவனங்களின் மூலமாக உதவித்தொகை பெற்றுப் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.



மாற்று திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய சக்தி மசாலா நிறுவனத்திற்கும் மற்றும் ஊன்றுகோலாக இருந்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கும் நன்றி கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...