உடுமலை அருகே இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மருத்துவ குழுவினர் பரிசோதனை

மழைக்காலங்களில் தண்ணீரை காட்சி குடிக்க வேண்டும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், கொசுக்கள் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ குழுவினர் வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆர். பி. எஸ். கே மருத்துவ குழுவினர் வருகை தந்து பள்ளி மாணவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.

தற்போது மழைக்காலம் முடிவடைந்து, காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தொடக்க பள்ளிகளில் உள்ள மாணவர்களின் உடல் நலனை பரிசோதிக்கும் விதமாக ஆர்பிஎஸ்கே மருத்துவ குழுவினர் ஒவ்வொரு பள்ளியிலும் சென்று மாணவர்களின் உடல் நலனை பரிசோதித்து வருகின்றனர்.



அதன் அடிப்படையில் இன்று இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அப்போது மழைக்காலங்களில் தண்ணீரை காட்சி குடிக்க வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் பருவ கால முன்னெச்சரிக்கைகள் பற்றி மாணவர்களிடம் எடுத்துக் கூறினர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...