தி.மு.க. இளைஞரணி வாகன பேரணி - தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி வரவேற்பு

மோட்டார் சைக்கிள் பேரணி வடதாரை வழியாக சின்னகடை வீதி, பூக்கடை கார்னர், அலங்கியம் ரவுண்டானா, உடுமலை ரவுண்டானா, புதிய பஸ் நிலையம் வழியாக அமராவதி ரவுண்டானா சென்று முடிந்தது.


திருப்பூர்: தாராபுரம் வந்த திமுக இளைஞரணி வாகன பேரணியில் வந்த திமுக தொண்டர்களை அமைச்சர் கயல்விழி சால்வை அணிவித்து வரவேற்று பழங்கள் வழங்கினார்.

சேலத்தில் நடக்கும் இளைஞரணி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தி.மு.க. இளைஞரணியினர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக தாராபுரம் வந்தனர்.



அவர்களுக்கு ஐ.டி.ஐ. கார்னரில் அமைச்சர் கயல்விழி சால்வை அணிவித்து வரவேற்று பழங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் மற்றும் நகர செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினர்.



நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் பூங்கொத்து கொடுத்தார். பிறகு மோட்டார் சைக்கிள் பேரணி வடதாரை வழியாக சின்னகடை வீதி, பூக்கடை கார்னர், அலங்கியம் ரவுண்டானா, உடுமலை ரவுண்டானா, புதிய பஸ் நிலையம் வழியாக அமராவதி ரவுண்டானா சென்று முடிந்தது.



அப்போது மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார், துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, நகர அவைத் தலைவர் கதிரவன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஹைடெக் அன்பழகன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நகர நிர்வாகிகள், இளைஞரணி, தொண்டரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....