வால்பாறை அருகே விபத்தில் சிக்கிய பேருந்து - அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

பேருந்தில் டீசல் டியூப் கட்டானதால் பிரேக் பிடிக்காமல் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: வால்பாறை அருகே நல்லகாத்து எஸ்டேட் சாலையில் வெள்ளமலை எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்து, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 34 அரசு பேருந்து உள்ளது வால்பாறையிலிருந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து சென்று வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை எஸ்டேட் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று வந்தது.

இந்த பேருந்தை ஓட்டுநர் வெங்கடேஷ்குமார் மற்றும் நடத்துநர் பாலு ஆகியோர் இயக்கி வந்தனர். பேருந்தில் 11 பயணிகள் வால்பாறைக்கு பயணித்து உள்ளனர்.



சுமார் 3 மணி அளவில் வால்பாறை அருகே நல்லகாத்து எஸ்டேட் சாலையில் வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பு சுவரை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த 11 பேர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.



பேருந்தில் டீசல் டியூப் கட்டானதால் பிரேக் பிடிக்காமல் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...