வால்பாறை அருகே விபத்தில் சிக்கிய பேருந்து - அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

பேருந்தில் டீசல் டியூப் கட்டானதால் பிரேக் பிடிக்காமல் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: வால்பாறை அருகே நல்லகாத்து எஸ்டேட் சாலையில் வெள்ளமலை எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்து, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 34 அரசு பேருந்து உள்ளது வால்பாறையிலிருந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து சென்று வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை எஸ்டேட் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று வந்தது.

இந்த பேருந்தை ஓட்டுநர் வெங்கடேஷ்குமார் மற்றும் நடத்துநர் பாலு ஆகியோர் இயக்கி வந்தனர். பேருந்தில் 11 பயணிகள் வால்பாறைக்கு பயணித்து உள்ளனர்.



சுமார் 3 மணி அளவில் வால்பாறை அருகே நல்லகாத்து எஸ்டேட் சாலையில் வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பு சுவரை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த 11 பேர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.



பேருந்தில் டீசல் டியூப் கட்டானதால் பிரேக் பிடிக்காமல் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...