விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் - பறிமுதல் செய்த பொள்ளாச்சி அதிகாரிகள்

இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைத்து இருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும் என சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விற்பனைக்காக லாரியல் கொண்டு வரப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருட்களை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி பகுதியில், விற்பனைக்காக லாரியில் கொண்டு வரப்பட்ட, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி - கோவை ரோட்டில் நகராட்சி சுகாதார அலுவலர் சேகர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சி.டி.சி., மேட்டில் கோவையில் இருந்து பொருட்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நகராட்சி பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. அதில், பொள்ளாச்சி பகுதியில் வினியோகம் செய்வதற்காக கோவையில் இருந்து, பிளாஸ்டிக் பேக், டம்ளர்கள், ஸ்பூன்கள், நான் ஓவன் பேக்ஸ், ஸ்ட்ரா போன்றவை கொண்டு வரப்பட்டன.

மொத்தம், 35 பண்டல்களில், 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு, அபராதம் விதிக்கப்பட உள்ளது. இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைத்து இருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் இல்லாத பொள்ளாச்சி நகராட்சியாக மாற்ற, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...