உடுமலையில் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகளை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பாலத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்து விட்டதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாற வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பாலத்தின் கிழக்கு பகுதி முழுவதும் விளக்குகள் எரிவதில்லை. இதை சாதகமாக கொண்டு அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தளிரோடு வழியாக திருமூர்த்தி மலை, அமராவதி, மூணார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் வழியாக பஸ், வாகன, சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் குறுக்காக ரயில் பாதை செல்கிறது. ரயில் வரும் சமயத்தில் கேட் அடைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. அதைத் தொடர்ந்து காந்தி சதுக்கம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளின் இரவு நேர பயணத்திற்கு ஏதுவாக பாலத்தின் இரண்டு புறங்களிலும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.

இந்த பாலம் கட்டப்பட்ட பின்பு போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்து வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்தை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் மேம்பாலத்தின் கிழக்குப் பகுதியில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் பழுதடைந்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் மேம்பாலத்தில் விளக்குகள் எரியாமல் ஒரு பகுதி இருள் சூழ்ந்து விடுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பின்பு வாகன ஓட்டிகள் விரைவான பயணத்தை பெற்று வருகின்றனர். ஆனால் பாலத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்து விட்டதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாற வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பாலத்தின் கிழக்கு பகுதி முழுவதும் விளக்குகள் எரிவதில்லை. இதை சாதகமாக கொண்டு அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது.

அத்துடன் பாலத்தின் இரண்டு புறங்களிலும் கான்கிரீட் பாதை முடிவடைந்து தார் சாலை தொடங்கும் பகுதியில் ஆங்காங்கே துளை விழுந்துள்ளது. அதை சீரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாலத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மேம்பாலத்தில் பழுதடைந்த விளக்குகளை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் பாலத்தில் ஏற்பட்டுள்ள துளைகளை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...