உடுமலையில் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகளை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பாலத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்து விட்டதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாற வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பாலத்தின் கிழக்கு பகுதி முழுவதும் விளக்குகள் எரிவதில்லை. இதை சாதகமாக கொண்டு அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தளிரோடு வழியாக திருமூர்த்தி மலை, அமராவதி, மூணார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் வழியாக பஸ், வாகன, சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் குறுக்காக ரயில் பாதை செல்கிறது. ரயில் வரும் சமயத்தில் கேட் அடைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. அதைத் தொடர்ந்து காந்தி சதுக்கம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளின் இரவு நேர பயணத்திற்கு ஏதுவாக பாலத்தின் இரண்டு புறங்களிலும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.

இந்த பாலம் கட்டப்பட்ட பின்பு போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்து வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்தை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் மேம்பாலத்தின் கிழக்குப் பகுதியில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் பழுதடைந்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் மேம்பாலத்தில் விளக்குகள் எரியாமல் ஒரு பகுதி இருள் சூழ்ந்து விடுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பின்பு வாகன ஓட்டிகள் விரைவான பயணத்தை பெற்று வருகின்றனர். ஆனால் பாலத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்து விட்டதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாற வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பாலத்தின் கிழக்கு பகுதி முழுவதும் விளக்குகள் எரிவதில்லை. இதை சாதகமாக கொண்டு அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது.

அத்துடன் பாலத்தின் இரண்டு புறங்களிலும் கான்கிரீட் பாதை முடிவடைந்து தார் சாலை தொடங்கும் பகுதியில் ஆங்காங்கே துளை விழுந்துள்ளது. அதை சீரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாலத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மேம்பாலத்தில் பழுதடைந்த விளக்குகளை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் பாலத்தில் ஏற்பட்டுள்ள துளைகளை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...