குண்டடம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - திரளான கால்நடைகள் பங்கேற்பு

பசு, எருமை மாடு, ஆடு, கோழி, நாய் ஆகிய கால்நடைகளுக்கு கூடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி உள்ளிட்ட 1,195 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.


திருப்பூர்: குண்டடம் அடுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

குண்டடம் அடுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் சூரியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோப்பனகவுண்டன் பாளையத்தில் நடைபெற்றது. குண்டடம் வட்டாரம் பேட்டை காளிபாளையம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

முகாமில் பீலிக்காம்பட்டி கால்நடை உதவி மருத்துவர் மோகன்ராஜ் தலைமையில் மருத்துவர் கொண்ட குழுவினர் பசு, எருமை மாடு, ஆடு, கோழி, நாய் ஆகிய கால்நடைகளுக்கு கூடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி உள்ளிட்ட 1,195 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் மழை மற்றும் பனிக்காலத்தில் கால்நடைகளை எவ்வாறு பாதுகாப்பது குறித்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் முதலிபாளையம் கால்நடை உதவி மருத்துவர் அருண்நிதி, பொன்னாங்காளிவலசு கால்நடை ஆய்வாளர் காந்திமதி, குண்டடம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுமதி, விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறந்த கால்நடை மேலாண்மைக்கான மூன்று சிறப்பான வளர்ப்பு கிடாரி கன்றுகளின் உரிமையாளரான விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...