வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணிகள் - உடுமலையில் சிறப்பு முகாம்களின் தேதி மாற்றம்

மாற்றி வைக்கப்பட்ட சிறப்பு முகாமை வாக்காளர்கள் பயன்படுத்தி பெயர் சேர்த்தல், நீக்கம் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொண்டு பயன் அடையுமாறு உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 18 மற்றும் 19 ம் தேதிகளில் வாக்குச் சாவடிகளில் நடைபெற இருந்த 2-ம் கட்ட சிறப்பு முகாம் வருகின்ற 25 (சனி)மற்றும் 26 -(ஞாயிறு) தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி கடந்த மாதம் 27-ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு வழக்கமான திருத்தப் பணிகள் தொடங்கியது. அன்றைய தினத்தில் இருத்து பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரிமாற்றம், திருத்தம் செய்தல், வாக்குச்சாவடி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு வாக்காளர் உதவி மைய செயலி மற்றும் இணையதள வாயிலாகவும் நேரில் படிவங்கள் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 4 மற்றும் 5- ம் தேதிகளில் வாக்குச்சாவடிகளில் முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அப்போது பல்வேறு அரசியல் கட்சியினரும் பொது மக்களை அழைத்து வந்து திருத்தங்களை மேற்கொண்டனர்.

உடுமலை பகுதியில் நடைபெற்ற இந்த பணிகளை உடுமலை தாசில்தார் ப.சுந்தரம் மற்றும் தேர்தல் துணை தாசில்தார் சையது ராபியம்மாள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.மேலும் 2-ம் கட்ட சிறப்பு முகாம் வருகின்ற 18 மற்றும் 19 ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் மாற்றி வைக்கப்பட்ட தேதியில் சிறப்பு முகாமை வாக்காளர்கள் பயன்படுத்தி திருத்தங்கள் மேற்கொண்டு பயன் அடையுமாறு உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...