தாராபுரம் பகுதியில் மது பிரியர்களால் சுகாதார சீர்கேடு - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தாராபுரத்தில் பாருக்கு தடை செய்யப்பட்டதால் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தின்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கி வந்து மதுக்கடைக்கு முன்பு அமர்ந்து மது குடித்து வருவது பெண்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. சிறுநீர் கழித்தும், எச்சில் துப்பியும், வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகள் முன்பாக மது பிரியர்கள் மது குடிப்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் வட்டார பகுதியில் 12 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 3 மது கடை பாருகளுக்கு மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒன்பது மது கடைமார்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அனுமதி இல்லை என கூறி டாஸ்மார்க் நிர்வாகம் பார்களை சீல் வைத்து சென்றது இதனால் பாருக்கு தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக மதுபிரியர்கள் வேறு வழியின்றி வெளியில் பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தின்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கி வந்து மதுக்கடைக்கு முன்பு அமர்ந்து மது குடித்து வருவது அந்த வழியில் செல்லும் பெண்கள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் அதே இடத்தில் சிறுநீர் கழித்தும், எச்சில் துப்பியும், வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் தேங்கி சாக்கடை போல் இருப்பதாலும் பல்வேறு நோய்கள் டாஸ்மாக் மூலம் பரப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது இதை கருத்தில் கொண்டு டாஸ்மார்க் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...