மூலனூர் பகுதியில் கண்வலி கிழங்கு சாகுபடியில் நஷ்டம் - உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

ஏக்கருக்கு 100 கிலோ விதை கிடைப்பதற்கு பதிலாக வெறும் 25 கிலோ மட்டுமே கண் வலி கிழங்கு கிடைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விக்கலாம் என்று கொண்டு சென்றால் இங்கு விற்க முடியாது என கூறுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் எதிர்பாராத விலை கிடைக்காததால் கண் வலி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏக்கருக்கு 100 கிலோ விதை கிடைப்பதற்கு பதிலாக 25 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. கிலோ 3000 ரூபாய்க்கு விற்கும் எனக் கூறினர். ஆனால் தற்போது பதினைந்தாயிரம் கூட வாங்க ஆள் இல்லை.

ஒழுங்குமுறை விற்பனை கூடம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விக்கலாம் என்று கொண்டு சென்றால் இது அங்கீகரிக்கப்பட்ட பயிர் அல்ல. இங்கு விற்க முடியாது என கூறுகின்றனர்.

இதை சாகுபடி செய்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலை நிர்ணயமும், ஏற்றுமதி மற்றும் விற்பனை வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...