ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கோவையில் தீபாவளி கொண்டாட்டம்

உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு கோவை விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.



கோவையில் செயல்பட்டு விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக, அதன் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி தலைமையில், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் முதியோர் மற்றும் இளையோருக்கு தொடர்ந்து உதவிகள் செய்வது, உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி, அறங்காவலர் நிவேதா ஆகியோர் கலந்து கொண்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக மனித நேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் தலைவர் சுலைமான் கலந்து கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஸ்வரி பெண்கள் மட்டும் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருவதாகவும், இது போன்று தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...