ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கோவையில் தீபாவளி கொண்டாட்டம்

உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு கோவை விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.



கோவையில் செயல்பட்டு விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக, அதன் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி தலைமையில், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் முதியோர் மற்றும் இளையோருக்கு தொடர்ந்து உதவிகள் செய்வது, உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி, அறங்காவலர் நிவேதா ஆகியோர் கலந்து கொண்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக மனித நேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் தலைவர் சுலைமான் கலந்து கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஸ்வரி பெண்கள் மட்டும் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருவதாகவும், இது போன்று தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...