ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கோவையில் தீபாவளி கொண்டாட்டம்

உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு கோவை விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.



கோவையில் செயல்பட்டு விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக, அதன் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி தலைமையில், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் முதியோர் மற்றும் இளையோருக்கு தொடர்ந்து உதவிகள் செய்வது, உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் விநாயகா நீட் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி, அறங்காவலர் நிவேதா ஆகியோர் கலந்து கொண்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக மனித நேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் தலைவர் சுலைமான் கலந்து கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஸ்வரி பெண்கள் மட்டும் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருவதாகவும், இது போன்று தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருவதாக தெரிவித்தார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...