பாதுகாப்பான தீபாவளி - உடுமலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பட்டாசுகள் வெடிக்கும் போது பெரியவர்களின் துணையின்றி பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அரசின் அறிவுரையை பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என உடுமலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பண்டிகை காலம் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தான். ஆனாலும் பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாடுவது மிக முக்கியம். அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வருகின்ற தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது பற்றி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.



நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்து துப்புரவு பணியாளருக்கு புத்தாடை வழங்கி, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறினார்.



பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்போது, குடிசை பகுதிகளுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் தொடக்கூடாது. பெரியவர்களின் துணையின்றி நீங்களாகவே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் போது அரசின் அறிவுரையை பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும். குறிப்பாக மணல் மற்றும் தண்ணீர் நிரம்பிய பக்கெட்டுகளை அருகில் வைத்திருக்க வேண்டும். கையில் வைத்து வெடிக்கக் கூடாது. விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று எடுத்துரைத்தார்.

பள்ளி மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...