பாதுகாப்பான தீபாவளி - உடுமலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பட்டாசுகள் வெடிக்கும் போது பெரியவர்களின் துணையின்றி பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அரசின் அறிவுரையை பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என உடுமலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பண்டிகை காலம் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தான். ஆனாலும் பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாடுவது மிக முக்கியம். அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வருகின்ற தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது பற்றி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.



நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்து துப்புரவு பணியாளருக்கு புத்தாடை வழங்கி, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறினார்.



பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்போது, குடிசை பகுதிகளுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் தொடக்கூடாது. பெரியவர்களின் துணையின்றி நீங்களாகவே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் போது அரசின் அறிவுரையை பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும். குறிப்பாக மணல் மற்றும் தண்ணீர் நிரம்பிய பக்கெட்டுகளை அருகில் வைத்திருக்க வேண்டும். கையில் வைத்து வெடிக்கக் கூடாது. விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று எடுத்துரைத்தார்.

பள்ளி மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...