பாதுகாப்பான தீபாவளி - உடுமலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பட்டாசுகள் வெடிக்கும் போது பெரியவர்களின் துணையின்றி பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அரசின் அறிவுரையை பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என உடுமலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பண்டிகை காலம் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தான். ஆனாலும் பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாடுவது மிக முக்கியம். அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வருகின்ற தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது பற்றி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.



நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்து துப்புரவு பணியாளருக்கு புத்தாடை வழங்கி, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறினார்.



பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்போது, குடிசை பகுதிகளுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் தொடக்கூடாது. பெரியவர்களின் துணையின்றி நீங்களாகவே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் போது அரசின் அறிவுரையை பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும். குறிப்பாக மணல் மற்றும் தண்ணீர் நிரம்பிய பக்கெட்டுகளை அருகில் வைத்திருக்க வேண்டும். கையில் வைத்து வெடிக்கக் கூடாது. விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று எடுத்துரைத்தார்.

பள்ளி மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...