பாதுகாப்பான தீபாவளி - உடுமலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பட்டாசுகள் வெடிக்கும் போது பெரியவர்களின் துணையின்றி பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அரசின் அறிவுரையை பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என உடுமலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பண்டிகை காலம் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தான். ஆனாலும் பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாடுவது மிக முக்கியம். அதன் அடிப்படையில் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வருகின்ற தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது பற்றி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.



நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்து துப்புரவு பணியாளருக்கு புத்தாடை வழங்கி, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறினார்.



பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்போது, குடிசை பகுதிகளுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் தொடக்கூடாது. பெரியவர்களின் துணையின்றி நீங்களாகவே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் போது அரசின் அறிவுரையை பின்பற்றி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும். குறிப்பாக மணல் மற்றும் தண்ணீர் நிரம்பிய பக்கெட்டுகளை அருகில் வைத்திருக்க வேண்டும். கையில் வைத்து வெடிக்கக் கூடாது. விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று எடுத்துரைத்தார்.

பள்ளி மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...