முதல்வரிடம் பேசி எந்த பலனும் இல்லை - கோவையில் தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு

மின் கட்டணம் உயர்வை ரத்து செய்யவிட்டால் திட்டமிட்டபடி வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி மனித சங்கலி போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த போவதாக கோவையில் மின் நுகர்வோர் கூட்டமைப்பின அறிவித்தனர்.


கோவை: தமிழக முதல்வர், தொழில் கூடங்களில் மின் நுகர்வோர் கூட்டமைப்பை அழைத்து பேசினால் முழுமையான தீர்வு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால் ஆகியோர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மின் கட்டணம் உயர்வு குறித்து அறிக்கை பேசியிருந்தார். அவர் பேசியதில் எந்த பலனும் இல்லை. மின் கட்டண விவகாரத்தை தமிழக முதல்வர் மின் நுகர்வோர் கூட்டமைப்பை அழைத்து பேச மறுக்கிறதா என்று கேள்வி எழுப்பினர்.

மின் வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் பல லட்சம் தொழில் முனைவோர் கடனில் தத்தளிப்பதாக தெரிவித்தனர். தமிழகத்தில் சிறுகுறு தொழில் கூடங்கள் மற்றும் தொழில் முனைவோர் என பல லட்சம் பேர் உள்ளனர் என தெரிவித்த அவர்கள் கோவை மாவட்டத்தில் மட்டுமே சுமார் 1 லட்சத்தி 67 ஆயிரம் பேர் இருக்கின்றனர் எனவும், வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி சம்பளத்துடன் தீபாவளி போனஸ் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக தொழில் கூடங்களுக்கு மின் கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தி உள்ளது என்பதை சுட்டி காட்டிய அவர்கள் சிறுகுறு தொழில் அமைப்புகளை நசுக்கும் விதத்தில் தமிழக மின் வாரியம் செயல்படுவதாக விமர்சித்தனர்.

இதனை முறையாக தமிழக முதல்வர், தொழில் கூடங்களில் மின் நுகர்வோர் கூட்டமைப்பை அழைத்து பேசினால் முழுமையான தீர்வு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தனர். மேலும் இந்த அரசு நேற்று ஒரு அரசாணை குறித்து பேசியதை குறிபிட்ட அவர்கள் அது ஏற்கனவே சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட அரசாணை தான் எனவும் இதற்கான முழு விபரம் என்பது மின் கட்டணம் உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்றனர்.

எங்களுடைய முதல் கட்ட கோரிக்கை இரட்டிப்பு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், நாங்கள் அமைத்த சோலார் மின் உற்பத்திக்கு கூடுதல் தொகை வசூலித்தது அதில் உள்ள குளறுபடி தீர்க்க எங்களுடைய தொழில் துறையினர் அழைத்து பேசவில்லை அதிலும் மின் கட்டணத்தில் வந்து பணம் கேட்கின்றனர் என்றனர்.

இதுவரை ஒரு லட்சம் மின்னஞ்சல் அனுப்பியும் பல முறை தபால்களை அனுப்பியும் எந்த ஒரு அழைப்பும், அழைத்து பேசவில்லை என குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து தொழில் துறை மின் கட்டளை உயர்வுவை திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து அவர்கள் மூலமாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளதாகவும் மின் கட்டணம் உயர்வை ரத்து செய்யவிட்டால் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி மனித சங்கலி போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த போவதாக அறிவித்தனர்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...