பல்லடத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி அட்டை வழங்கும் நிகழ்வு

பல்லடம், சாமளாபுரம், கரடிவாவி, பொங்கலூர் உள்வட்டங்களில் இருந்து 1239 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை மற்றும் வாழ்த்து மடல்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினர்.


திருப்பூர்: பல்லடத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி அட்டை வழங்கும் நிகழ்வில் செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று வழங்கினர்.

கடந்த தேர்தல் அறிக்கையில் அறவித்தது போல அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமான தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 

முதல்கட்டமாக சுமார் 1 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதில் விடுபட்ட மகளிர் மீண்டும் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வங்கி அட்டை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்வில் தமிழ்நாடு செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம்,திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பன்னவர், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 



பல்லடம், சாமளாபுரம், கரடிவாவி, பொங்கலூர் உள்வட்டங்களில் இருந்து 1239 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை மற்றும் வாழ்த்து மடல்களை அமைச்சர்கள் வழங்கினர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...