பல்லடத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி அட்டை வழங்கும் நிகழ்வு

பல்லடம், சாமளாபுரம், கரடிவாவி, பொங்கலூர் உள்வட்டங்களில் இருந்து 1239 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை மற்றும் வாழ்த்து மடல்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினர்.


திருப்பூர்: பல்லடத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி அட்டை வழங்கும் நிகழ்வில் செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று வழங்கினர்.

கடந்த தேர்தல் அறிக்கையில் அறவித்தது போல அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமான தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 

முதல்கட்டமாக சுமார் 1 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதில் விடுபட்ட மகளிர் மீண்டும் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வங்கி அட்டை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்வில் தமிழ்நாடு செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம்,திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பன்னவர், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 



பல்லடம், சாமளாபுரம், கரடிவாவி, பொங்கலூர் உள்வட்டங்களில் இருந்து 1239 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை மற்றும் வாழ்த்து மடல்களை அமைச்சர்கள் வழங்கினர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...