கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறல் - சிறைக்கைதிகள் உரிமை மையம் ஆர்ப்பாட்டம்

கோவை மத்திய சிறையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கைதிகள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


கோவை: கோவை மத்திய சிறையில் தொடர்ந்து நடந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து சிறைக் கைதிகள் உரிமை மையம் சார்பாக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மத்திய சிறையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கைதிகள் 7 பேர் மீது ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.



இந்த நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிறை கைதிகள் உரிமை மையம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறைக் கைதிகள் உரிமை மையம் தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...