கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ராக்கிங் சம்பவம் - குற்றச்செயலில் மேலும் ஒரு மாணவர் சேர்ப்பு

இரண்டாம் ஆண்டு மாணவர் ராக்கிங் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வெங்கடேஷ் என்ற மேலும் ஒரு மாணவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார்(பி.எஸ்.ஜி) தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரை அதே கல்லூரியில் படிக்கும் 7 மாணவர்கள் மொட்டை அடித்து ரேக்கிங் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ராக்கிங்கில் ஈடுபட்ட பரணிதரன், வெங்கடேஷ், மாதவன், மணி, ஐயப்பன், சந்தோஷ், யாலிஸ் ஆகிய ஏழு மாணவர்களை பீளமேடு காவல்துறையினர் கைது செய்து ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்பு இரவு நேரத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் வெங்கடேஷ் என்ற மேலும் ஒரு மாணவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். மேலும் அனைத்து கல்லூரிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...