உடுமலையில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் - கால்நடை உதவி இயக்குனர் ஆய்வு

உடுமலை கோட்டத்தில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்குமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் முகாமினை கால்நடை உதவி இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்தின் உபதொழிலான கால்நடை வளர்ப்பு பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசு மற்றும் எருமை உள்ளிட்ட கால்நடைகளை கோமாரி நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கழுகரைப் பகுதியில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி முகாமை உடுமலை கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், கோமாரி நோய் தடுப்பு ஊசி 4- ம் சுற்று வருகின்ற 26 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உடுமலை கோட்டத்தில் மொத்தம் உள்ள 63 ஆயிரம் பசு மற்றும் எருமை இனங்கள், மாநில எல்லையோர கிராமங்களில் உள்ள 12 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஏற்கனவே செலுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப செயல் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தடுப்பூசி குழுவினர் தங்கள் பகுதிக்கு வரும் பொழுது தங்களது 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...