உடுமலை அருகே வீட்டின் பூட்டைஉடைத்து 15 பவுன் நகை திருட்டு - காவல்துறை விசாரணை

உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: வீட்டின் கதவு பூட்டை உடைத்து நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்

உடுமலை அடுத்த எலையமுத்தூர் பிரிவு அருகே உள்ள கொங்குரார் லே-அவுட்டை சேர்ந்தவர் நாகராஜன் (57). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தனது குடும்பத்துடன் கடந்த 4-ம் தேதி இரவு வீட்டை பூட்டிக்கொண்டு திருமூர்த்திநகரில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டார்.

இவர் குடியிருந்து வரக்கூடிய வீட்டு உரிமையாளரும் மூன்று நாட்களுக்கு முன்னரே மடத்துக்குளத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டார். இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி மாலை 5 மணிக்கு நாகராஜன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கேட் மற்றும் வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது டேபிளில் இருந்த 3¾ பவுன்நகைகள் திருடு போனது தெரிய வந்தது.

அதன்பின்பு கீழ்தளத்துக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது. இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தார். இதை உரிமையாளர் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 12 நகைகள் திருடு போனது. ஆக மொத்தம் 15 ¾ பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து நாகராஜன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...