வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு ஆய்வு

மழைக்காலங்களில் தக்காளியை தாக்கும் பூஞ்சாண மற்றும் பாக்டீரியல் நோய்களில் இருந்து பாதுகாக்கும் தொழில்நுட்பத்தினை உலக காய்கறிகள் மையம் கண்டறிந்துள்ளது. இத்தொழில்நுட்பம் குறித்த ஆய்வுத்திடல் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள மெட்டுபாவி கிராமத்தில், மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் உலகக் காய்கறிகள் மையம், தைவான் இணைந்து தாவர நல முனைப்பு நிதி உதவியுடன் தக்காளி மற்றும் அவரை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

பயிர்களில் தக்காளியை நோய் எதிர்ப்புத்திறன் உடைய கத்தரிரகத்தின் வேர்பகுதியுடன் இணைத்து ஒட்டுக்கட்டுவதன் மூலம் மழைக்காலங்களில் தக்காளியை தாக்கும் பூஞ்சாண மற்றும் பாக்டீரியல் நோய்களில் இருந்து பாதுகாக்கும் தொழில்நுட்பத்தினை உலக காய்கறிகள் மையம் கண்டறிந்துள்ளது. இத்தொழில்நுட்பம் குறித்த ஆய்வுத்திடல் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள மெட்டுபாவி கிராமத்தில், மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த ஆய்வுத்திடல் விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் பங்களிப்புடன் மதிப்பீடு செய்யும் நிகழ்வு கடந்த 06.11.2023 அன்று இராஜ் குமார், அவர்களது வயலில் நடைப்பெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக த்தின் பயிர்ப்பாதுகாப்பு மைய இயக்குநர் முனைவர் மூ.சாந்தி அவர்கள் தலைமையேற்று தலைமையுரையில் மழைக்காலங்களில் தக்காளிக்கு சிறந்த விலை கிடைக்கும் போதிலும், நோயின் பாதிப்பினால் விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.



மேலும், இந்த பாதிப்பினைக் குறைப்பதற்கு விவசாயிகள் அதிகளவில் பூஞ்சாணக் கொல்லிகளைத் பயன்படுத்த வேண்டி உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நோய் எதிர்ப்புத் திறன் உள்ள ஒட்டுத் தக்காளியின் செயல் திறன் மற்றும் அதனை சார்ந்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தும்போது சிறந்த முறையில் நோய்தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும் என்றார்.

மேலும், அவர் விஞ்ஞானிகள் மட்டுமே ஆய்வின் செயல் திறனை மதிப்பீடு செய்யாமல், விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுடன் சேர்ந்து மதிப்பீடு செய்யும் போது ஒரு மித்த நம்பகத்தன்மையும் கூடும் என்று எடுத்துரைத்தார்.

கிணத்துக்கடவு வட்டாரத்தின் தோட்டக்கலை உதவி இயக்குனர் ம.ஜமுனாதேவி அவர்கள் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பற்றியும், வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மற்றும் மேற்கொண்ட இந்த அய்வுத்திடலின் பயன்களையும் விவசாயிகள் பின்பற்றி பயன்பெற வேண்டும் என்றார்.

பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மா.முருகன் பேசுகையில் இத்திட்டதில் பின்பற்றப்பட்ட ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளையும் அவற்றின் முக்கியதுவத்தைப் பற்றியும் கூறினார். மேலும், பூச்சிச் கொல்லி எஞ்சிய நச்சில்லாத தக்காளி சாகுபடி உற்பத்தி குறித்தும் விளக்கம் அளித்தார்.

ஒட்டுதக்காளியின் நோய் எதிர்ப்பு திறனைப் பற்றியும் மற்றும் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மையில் உயிர்ப்பூஞ்சாண கொல்லிகளின் உபயோகம் பற்றியும் நோயியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் க.அங்கப்பன் அவர்கள் விளக்கம் அளித்தார்.தக்காளி விளைச்சலைப் பாதிக்கும் நச்சுயிரி நோய்களின் சேத அறிகுறிகள் மற்றும் அவற்றின் உயிரியல் முறை மேலாண்மை பற்றியும் நோயியல் துறை பேராசிரியர் முனைவர். கா.கார்த்திகேயன் அவர்கள் கூறினார்.

தாவர உயிர்த்தொழில் நுட்பவியல் விஞ்ஞானி முனைவர் நா.மணிகண்டபூபதி அவர்கள் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பில் உயிர் தொழில் நுட்பவியலின் பங்களிப்பை பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். பூச்சியியல் துறை இணை பேராசிரியர்கள் முனைவர் பா.ச.சண்முகம், முனைவர் தி.இளையபாரதி மற்றும் முனைவர் து.சீனிவாசன் ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்து நடத்தினர். கிணத்துக்கடவு பகுதியைச் சார்ந்த சுமார் 45 தக்காளி விவசாயிகள் மற்றும் 10 தோட்டக்கலை அலுவலர்கள் பங்கு பெற்று மதிப்பீடு செய்தனர்.

Newsletter

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...